New Themes: Little Story, Scrollider Express, and Pachyderm

Reblogged from WordPress.com News:

Click to visit the original post
  • Click to visit the original post
  • Click to visit the original post

Howdy all! We have a bunch of awesome new themes for you today, so let's dive right in.

First up is Little Story, a premium theme with design elements and inspiration from the talented Laura Amiss.

Little Story supports several post formats in different styles, large featured images on Sticky posts, a mobile-friendly layout (including a collapsible footer widget area), social network icons for Facebook, Twitter, and Pinterest, and an option to add author information after single posts.

Read more… 194 more words

2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரி

2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். http://ow.ly/jhkl5

2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரி

2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். http://ow.ly/jhjP3

கடந்த ஜுன், ஜுலை மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டல் முடிவு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனி தேர்வு ஹால் டிக்கெட் செப் 28 முதல், அக்., 1ம் தேதி வரை, வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு எழுதுபவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென புதிதாக பொறுப்பேற்றுள்ள சி.இ.ஓ முனுசாமி கூறியுள்ளார்.

30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்’, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

அக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் On-line-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் 21.09.2012 மற்றும் 22.09.2012 ஆகிய இரு நாட்களில் வரவேற்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கப்பள்ளித்துறையின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வுகள் அட்டவணை படியே நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.

முதன்மைக்கல்வி அலுவலர் பதவி உயர்வு இன்று வழங்கப்பட்டது.அதனால் ஏற்படும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலரையும் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .

முதன்முறையாக "ஆன் லைன்’ மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 15.9.2012 – ல் நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்’ மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்’ வெளியிடப்பட உள்ளது,” என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்

நடப்பு கல்வியாண்டில் ரூ.196 கோடி செலவில், 6 லட்சத்து 31 ஆயிரத்து 279 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி  பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

பள்ளிக் கல்வித்துறைக்கு www.tnschools.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.

TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .

TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க, வரும் 7ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் "ஆன்-லைன்’னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.

ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.
தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, “ஹால் டிக்கெட்அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம்.


ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து ரேங்க் பெற்ற மூன்று பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எம்.திவ்யாவும் (வயது 26), பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் சமூக அறிவியல் பிரிவில் ஆர்.அருள்வாணியும் (32), கணிதம்-அறிவியல் பிரிவில் பி.சித்ராவும் (39) முதலிடத்தை பிடித்துள்ளனர். தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த ஒன்பது பேருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேரில் 1,680 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்
இடைநிலை ஆசிரியர் தேர்வு
1. எம்.திவ்யா, பொள்ளாச்சி (மார்க் 122)
2. சி.சவீதா, திண்டுக்கல் (116)
3. ஷோபனா, திருச்சி (116)
பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் பிரிவு)
1. ஆர்.அருள்வாணி, உத்தமபாளையம் (மார்க் 125)
2. ஏ.பிருந்தா, உத்தமபாளையம் (124)
3. எஸ்.செந்தில்குமார், உத்தமபாளையம் (124)
கணிதம்-அறிவியல் பிரிவு
1. பி.சித்ரா, நாகப்பட்டினம் (மார்க் 142)
2. எச்.சர்மிளா, கோபிசெட்டிப்பாளையம் (131)
3. பிருந்தாதேவி, உத்தமபாளையம் (117)

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும்  திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.